ஹதீஸ்கள்
#5268
ஸஹீஹ் முஸ்லிம் - Drinks
சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் இடக் கையால் உணவு உண்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "வலக் கையால் உண்பீராக!" என்று சொன்னார்கள். அவர், "என்னால் முடியாது" என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உம்மால் முடியாமலே போகட்டும்!" என்று சொன்னார்கள். அகம்பாவமே அவரை (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கட்டுப்படாமல்) தடுத்தது. அவ்வாறே, அவரால் தமது வாய்க்குக் கையை உயர்த்த முடியாமல் போனது. அத்தியாயம் :
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا زيد بن الحباب، عن عكرمة بن عمار، حدثني اياس بن سلمة بن الاكوع، ان اباه، حدثه ان رجلا اكل عند رسول الله صلى الله عليه وسلم بشماله فقال " كل بيمينك " . قال لا استطيع قال " لا استطعت " . ما منعه الا الكبر . قال فما رفعها الى فيه
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Drinks
- Hadith Index
- #5268
- Book Index
- 142
Grades
- -
