ஹதீஸ்கள்
#5242
ஸஹீஹ் முஸ்லிம் - Drinks
அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம் "அந்நகீஉ" எனுமிடத்திலிருந்து ஒரு கோப்பைப் பாலை மூடாமல் கொண்டுவந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இதன்மீது ஒரு குச்சியைக் குறுக்காக வைத்தாவது இதை நீங்கள் மூடிக் கொண்டுவந்திருக்கக் கூடாதா?" என்று (என்னிடம்) கேட்டார்கள். இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். "தண்ணீர் தோல் பைகளின் வாய்ப்பகுதியைச் சுருக்கிட்டு வைக்குமாறும் கதவுகளை இரவில் தாழிட்டு வைக்குமாறும் கட்டளையிடப்பட்டுள்ளது" என்றும் அபூ ஹுமைத் (ரலி) அவர்கள் கூறினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. - அபூஹுமைத் (ரலி) அவர்களிடமிருந்து ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அதில் "நான் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு கோப்பை பால் கொண்டுவந்தேன்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன. ஸகரிய்யா பின் இஸ்ஹாக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "இரவில்" எனும் குறிப்பு இல்லை. அத்தியாயம் :
حدثنا زهير بن حرب، ومحمد بن المثنى، وعبد بن حميد، كلهم عن ابي عاصم، قال ابن المثنى حدثنا الضحاك، اخبرنا ابن جريج، اخبرني ابو الزبير، انه سمع جابر، بن عبد الله يقول اخبرني ابو حميد الساعدي، قال اتيت النبي صلى الله عليه وسلم بقدح لبن من النقيع ليس مخمرا فقال " الا خمرته ولو تعرض عليه عودا " . قال ابو حميد انما امر بالاسقية ان توكا ليلا وبالابواب ان تغلق ليلا
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Drinks
- Hadith Index
- #5242
- Book Index
- 116
Grades
- -
