ஹதீஸ்கள்
#5109
ஸஹீஹ் முஸ்லிம் - Sacrifices
சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (ஓர் ஆண்டில்) "உங்களில் குர்பானி கொடுத்தவர், மூன்று நாட்களுக்குப் பின் தமது வீட்டில் (குர்பானி இறைச்சியில்) எதையும் வைத்திருக்க வேண்டாம்" என்று கூறினார்கள். அடுத்த ஆண்டு வந்தபோது மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! கடந்த ஆண்டில் நாங்கள் செய்ததைப் போன்றே இந்த ஆண்டும் செய்ய வேண்டுமா?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இல்லை (அவ்வாறு செய்ய வேண்டியதில்லை); அந்த ஆண்டில் மக்களுக்கு (பஞ்சத்தால்) சிரமம் ஏற்பட்டிருந்தது. (குர்பானி இறைச்சி மூலம்) பரவலாக மக்கள் அனைவரும் பயனடைய வேண்டும் என நான் விரும்பினேன் (எனவே, மூன்று நாட்களுக்கு மேல் உண்ணவேண்டாம் எனத் தடை விதித்தேன்)" என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا اسحاق بن منصور، اخبرنا ابو عاصم، عن يزيد بن ابي عبيد، عن سلمة، بن الاكوع ان رسول الله صلى الله عليه وسلم قال " من ضحى منكم فلا يصبحن في بيته بعد ثالثة شييا " . فلما كان في العام المقبل قالوا يا رسول الله نفعل كما فعلنا عام اول فقال " لا ان ذاك عام كان الناس فيه بجهد فاردت ان يفشو فيهم
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Sacrifices
- Hadith Index
- #5109
- Book Index
- 46
Grades
- -
