ஹதீஸ்கள்
#5105
ஸஹீஹ் முஸ்லிம் - Sacrifices
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் மினாவில் தங்கும் நாளிலிருந்து மூன்று நாட்களுக்கு மேல் குர்பானிப் பிராணிகளின் இறைச்சியை உண்ணாமல் இருந்தோம். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(இப்போது நீங்கள் உண்ணலாம்;சேமித்தும்வைக்கலாம்" என்று கூறி, எங்களுக்கு அனுமதி வழங்கினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் அதாஉ (ரஹ்) அவர்களிடம் "நாங்கள் மதீனா வரும்வரை (சேமித்துவைத்தோம்)" என்று ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம்" என்று விடையளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا علي بن مسهر، ح وحدثنا يحيى بن ايوب، حدثنا ابن علية، كلاهما عن ابن جريج، عن عطاء، عن جابر، ح وحدثني محمد بن حاتم، - واللفظ له - حدثنا يحيى بن سعيد، عن ابن جريج، حدثنا عطاء، قال سمعت جابر بن، عبد الله يقول كنا لا ناكل من لحوم بدننا فوق ثلاث منى فارخص لنا رسول الله صلى الله عليه وسلم فقال " كلوا وتزودوا " . قلت لعطاء قال جابر حتى جينا المدينة قال نعم
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Sacrifices
- Hadith Index
- #5105
- Book Index
- 42
Grades
- -
