ஹதீஸ்கள்
#5077
ஸஹீஹ் முஸ்லிம் - Sacrifices
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தாய்மாமா) அபூபுர்தா (ரலி) அவர்கள் (பெருநாள்) தொழுகைக்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுத்து விட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "அதற்குப் பதிலாக வேறொன்றை அறு(த்துக் குர்பானி கொடு)ப்பீராக!" என்று கூறினார்கள். உடனே அபூ புர்தா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் ஒரு வயதுடைய வெள்ளாடு ஒன்றைத் தவிர வேறெதுவுமில்லை. -அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: "அது ஒரு வயது பூர்த்தியான ஆட்டைவிடச் சிறந்ததாகும்"என்று அபூபுர்தா (ரலி) அவர்கள் சொன்னதாக (எனக்கு அறிவிக்கப்பட்டது என்று) நான் எண்ணுகிறேன்.- அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதையே அதற்குப் பதிலாக அறுத்துக் கொள்வீராக! உமக்குப் பிறகு வேறெவருக்கும் இது செல்லாது" என்று சொன்னார்கள். - மேற்கண்ட ஹதீஸ் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், "அது ஒரு வயது பூர்த்தியான ஆட்டைவிடச் சிறந்ததாகும் (என்று அபூபுர்தா (ரலி) அவர்கள் சொன்னதாக எனக்கு அறிவிக்கப்பட்டது என்று நான் எண்ணுகிறேன்)" என ஷுஅபா (ரஹ்) அவர்கள் ஐயப்பாட்டுடன் கூறியுள்ள குறிப்பு இடம்பெறவில்லை. அத்தியாயம் :
حدثنا محمد بن بشار، حدثنا محمد، - يعني ابن جعفر - حدثنا شعبة، عن سلمة، عن ابي جحيفة، عن البراء بن عازب، قال ذبح ابو بردة قبل الصلاة فقال النبي صلى الله عليه وسلم " ابدلها " . فقال يا رسول الله ليس عندي الا جذعة - قال شعبة واظنه قال - وهي خير من مسنة . فقال رسول الله صلى الله عليه وسلم " اجعلها مكانها ولن تجزي عن احد بعدك
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Sacrifices
- Hadith Index
- #5077
- Book Index
- 14
Grades
- -
