ஹதீஸ்கள்
#4914
ஸஹீஹ் முஸ்லிம் - Government
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அன்சாரிகளில் "பனுந் நபீத்" எனும் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீங்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவீர்கள் என நான் உறுதிமொழிகிறேன்" என்று கூறிவிட்டு, (களத்தில்) முன்னேறிச் சென்று கொல்லப்படும்வரை போரிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இவர் குறைவாக நற்செயல் புரிந்தார்; நிறைவாக நற்பலன் வழங்கப்பெற்றார்" என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அபூபக்ர் பின் அபீ ஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "பனுந் நபீத் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. அத்தியாயம் :
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا ابو اسامة، عن زكرياء، عن ابي اسحاق، عن البراء، قال جاء رجل من بني النبيت الى النبي صلى الله عليه وسلم ح وحدثنا احمد بن جناب المصيصي حدثنا عيسى - يعني ابن يونس - عن زكرياء عن ابي اسحاق عن البراء قال جاء رجل من بني النبيت - قبيل من الانصار - فقال اشهد ان لا اله الا الله وانك عبده ورسوله . ثم تقدم فقاتل حتى قتل فقال النبي صلى الله عليه وسلم " عمل هذا يسيرا واجر كثيرا
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Government
- Hadith Index
- #4914
- Book Index
- 209
Grades
- -
