ஹதீஸ்கள்
#4733
ஸஹீஹ் முஸ்லிம் - Government
ஹசன் பின் அபில்ஹசன் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரான ஆயித் பின் அம்ர் (ரலி) அவர்கள் (அன்றைய பஸ்ராவின் ஆட்சியராயிருந்த) உபைதுல்லாஹ் பின் ஸியாதிடம் சென்று, "அன்புக் குழந்தாய்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நிர்வாகிகளில் மிகவும் மோசமானவர், இரக்கமற்ற கல்நெஞ்சக்காரர்தாம்" என்று கூறியதை நான் கேட்டேன். அவர்களில் ஒருவராக நீ ஆகிவிட வேண்டாம் என உன்னை நான் எச்சரிக்கிறேன்" என்று கூறினார்கள். அதற்கு உபைதுல்லாஹ், "(நீர் போய்) உட்காரும். நீர் முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர்களில் மட்டமான ஒருவர்தாம்" என்று கூறினார். அதற்கு ஆயித் பின் அம்ர் (ரலி) அவர்கள், "(நபியின் தோழர்களான) அவர்களில் மட்டமானவர்களும் இருந்தார்களா? அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களிலும் மற்றவர்களிலும்தாம் மட்டமானவர்கள் தோன்றினர்" என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا شيبان بن فروخ، حدثنا جرير بن حازم، حدثنا الحسن، ان عايذ بن عمرو، - وكان من اصحاب رسول الله صلى الله عليه وسلم - دخل على عبيد الله بن زياد فقال اى بنى اني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " ان شر الرعاء الحطمة فاياك ان تكون منهم " . فقال له اجلس فانما انت من نخالة اصحاب محمد صلى الله عليه وسلم . فقال وهل كانت لهم نخالة انما كانت النخالة بعدهم وفي غيرهم
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Government
- Hadith Index
- #4733
- Book Index
- 32
Grades
- -
