ஹதீஸ்கள்
#4709
ஸஹீஹ் முஸ்லிம் - Government
ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் என் தந்தை (சமுரா -ரலி) அவர்களுடன் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "பன்னிரண்டு கலீஃபாக்கள் மக்களை ஆளாதவரை இந்த ஆட்சியதிகாரம் முடிவடையாது" என்று கூறிவிட்டு, பிறகு எனக்குக் கேட்காமல் இரகசியமாக ஏதோ (என் தந்தையிடம்) சொன்னார்கள். அப்போது நான் என் தந்தையிடம், "நபி (ஸல்) அவர்கள் என்ன சொன்னார்கள்?" என்று கேட்டேன். அதற்கு என் தந்தை "அவர்கள் அனைவரும் குறைஷியர் ஆவர் (என்று கூறினார்கள்)" என்றார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا ابو معاوية، عن داود، عن الشعبي، عن جابر، بن سمرة قال قال النبي صلى الله عليه وسلم " لا يزال هذا الامر عزيزا الى اثنى عشر خليفة " . قال ثم تكلم بشىء لم افهمه فقلت لابي ما قال فقال " كلهم من قريش
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Government
- Hadith Index
- #4709
- Book Index
- 9
Grades
- -
