ஹதீஸ்கள்
#4670
ஸஹீஹ் முஸ்லிம் - Jihad and Expeditions
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அகழ்ப் போரின்போது (அகழ் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுடன் மண்ணைச் சுமந்து எடுத்துச் சென்றுகொண்டு இருந்தார்கள். மண், அவர்களது வயிற்றின் வெண்மையை மறைத்துவிட்டிருந்தது. அப்போது அவர்கள் இவ்வாறு (பாடிய வண்ணம்) கூறிக்கொண்டு இருந்தார்கள்: அல்லாஹ்வின் மீதாணை! அல்லாஹ் இல்லாவிட்டால், நாங்கள் நேர்வழி அடைந்திருக்கமாட்டோம் தர்மமும் செய்திருக்கமாட்டோம் தொழுதிருக்கவுமாட்டோம். எங்கள்மீது அமைதியைப் பொழிவாயாக! இவர்கள் (கூட்டுப் படையினர்) எங்களுக்கு அக்கிரமம் இழைத்துவிட்டனர். சில வேளை இவ்வாறு கூறினார்கள்: இந்தப் பிரமுகர்கள் எங்களை நிராகரித்துவிட்டனர். இவர்கள் எங்களைச் சோதனையில் ஆழ்த்த விரும்பினால் நாங்கள் இடம் தரமாட்டோம். "(நாங்கள் இடம் தரமாட்டோம்; நாங்கள் இடம் தரமாட்டோம் என) இந்த (இறுதி) வாசகத்தை உரத்த குரலில் கூறிக்கொண்டு இருந்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் பராஉ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், ("இவர்கள் எங்களை நிராகரித்து விட்டனர்" என்பதற்குப் பகரமாக) "இவர்கள் எங்கள்மீது எல்லை மீறிவிட்டனர்" என்று இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
حدثنا محمد بن المثنى، وابن، بشار - واللفظ لابن المثنى - قالا حدثنا محمد، بن جعفر حدثنا شعبة، عن ابي اسحاق، قال سمعت البراء، قال كان رسول الله صلى الله عليه وسلم يوم الاحزاب ينقل معنا التراب ولقد وارى التراب بياض بطنه وهو يقول " والله لولا انت ما اهتدينا ولا تصدقنا ولا صلينا فانزلن سكينة علينا ان الالى قد ابوا علينا " . قال وربما قال " ان الملا قد ابوا علينا اذا ارادوا فتنة ابينا " . ويرفع بها صوته
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Jihad and Expeditions
- Hadith Index
- #4670
- Book Index
- 152
Grades
- -
