ஹதீஸ்கள்
#4651
ஸஹீஹ் முஸ்லிம் - Jihad and Expeditions
மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஏதேனும் பிரார்த்தித்தால்) மூன்று முறை கோருவதையே விரும்புவார்கள். "இறைவா! குறைஷியரை நீயே கவனித்துக்கொள். இறைவா! குறைஷியரை நீயே கவனித்துக்கொள். இறைவா! குறைஷியரை நீயே கவனித்துக்கொள்" என்று மூன்று முறை பிரார்த்தித்தார்கள்" என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது. மேலும் வலீத் பின் உத்பா, உமய்யா பின் கலஃப் ஆகியோர் பெயரையும் குறிப்பிட்டதாகவும் இடம்பெற்றுள்ளது. அந்த அறிவிப்பிலுள்ள ஐயப்பாடு இதில் இல்லை. "ஏழாமவர் பெயரை நான் மறந்துவிட்டேன்" என்று அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாகவும் காணப்படுகிறது. அத்தியாயம் :
وحدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا جعفر بن عون، اخبرنا سفيان، عن ابي، اسحاق بهذا الاسناد نحوه وزاد وكان يستحب ثلاثا يقول " اللهم عليك بقريش اللهم عليك بقريش اللهم عليك بقريش " . ثلاثا وذكر فيهم الوليد بن عتبة وامية بن خلف ولم يشك . قال ابو اسحاق ونسيت السابع
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Jihad and Expeditions
- Hadith Index
- #4651
- Book Index
- 133
Grades
- -
