ஹதீஸ்கள்
#4514
ஸஹீஹ் முஸ்லிம் - Lost Property
அபூஷுரைஹ் அல்குஸாயீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "விருந்துபசாரம் மூன்று தினங்களாகும். ஒரு பகல் ஓர் இரவு (விருந்துபசாரம்) அவருடைய கொடையாகும். ஒரு முஸ்லிமான மனிதர், தம் சகோதரரிடம் அவரைப் பாவத்தில் தள்ளும் அளவுக்குத் தங்கியிருப்பதற்கு அனுமதி இல்லை" என்று கூறினார்கள். மக்கள், "அவரைப் பாவத்தில் தள்ளுதல் எப்படி, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "அவ(ர் தம் சகோதர)ரிடம் தங்கி இருப்பார். ஆனால், விருந்துபசாரம் செய்யுமளவுக்கு அவரிடம் எதுவுமே இருக்காது" என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا ابو كريب، محمد بن العلاء حدثنا وكيع، حدثنا عبد الحميد بن جعفر، عن سعيد بن ابي سعيد المقبري، عن ابي شريح الخزاعي، قال قال رسول الله صلى الله عليه وسلم " الضيافة ثلاثة ايام وجايزته يوم وليلة ولا يحل لرجل مسلم ان يقيم عند اخيه حتى يوثمه " . قالوا يا رسول الله وكيف يوثمه قال " يقيم عنده ولا شىء له يقريه به
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Lost Property
- Hadith Index
- #4514
- Book Index
- 16
Grades
- -
