ஹதீஸ்கள்
#4485
ஸஹீஹ் முஸ்லிம் - Judicial Decisions
முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களின் எழுத்தர் (வர்ராத் (ரஹ்) அவர்கள்) கூறியதாவது: முஆவியா (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்ற (ஹதீஸ்) ஒன்றை எனக்கு எழுதி அனுப்புங்கள்" என முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள். அதற்கு முஃகீரா (ரலி) அவர்கள், "அல்லாஹ் உங்களுக்கு மூன்று விஷயங்களை வெறுத்துள்ளான். (இவ்வாறு) சொல்லப்பட்டது, அவர் சொன்னார் என (ஊர்ஜிதமில்லாததை)ப் பேசுவது, செல்வங்களை வீணாக்குவது, (தேவையின்றி) அதிகமாகக் கேள்விகள் கேட்பது ஆகியவையே அவை" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்று பதில் எழுதினார்கள். அத்தியாயம் :
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا اسماعيل ابن علية، عن خالد الحذاء، حدثني ابن اشوع، عن الشعبي، حدثني كاتب المغيرة بن شعبة، قال كتب معاوية الى المغيرة اكتب الى بشىء سمعته من رسول الله صلى الله عليه وسلم . فكتب اليه اني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " ان الله كره لكم ثلاثا قيل وقال واضاعة المال وكثرة السوال
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Judicial Decisions
- Hadith Index
- #4485
- Book Index
- 16
Grades
- -
