ஹதீஸ்கள்
#4479
ஸஹீஹ் முஸ்லிம் - Judicial Decisions
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹிந்த் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த பூமியின் மேலுள்ள வீட்டார்களிலிலேயே உங்களுடைய வீட்டாரை இறைவன் இழிவடையச் செய்வதே (அன்று) எனக்கு விருப்பமானதாக இருந்தது. இந்த பூமியின் மேலுள்ள வீட்டார்களில் உங்கள் வீட்டாரை இறைவன் மேன்மையடையச் செய்வதே (இன்று) எனக்கு விருப்பமானதாய் இருக்கிறது" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த ஏக இறை)வன்மீது சத்தியமாக! உனது இந்த விருப்பம் மேன்மேலும் அதிகரிக்கும்" என்று கூறினார்கள். பிறகு ஹிந்த் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) அபூசுஃப்யான் கருமியான மனிதர் ஆவார். அவருக்குரிய செல்வத்திலிருந்து அவரது அனுமதியில்லாமல் (எடுத்து) என் பிள்ளைகளுக்குச் செலவழித்தால், அது என்மீது குற்றமாகுமா?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "நியாயமான அளவுக்கு எடுத்து அவர்களுக்குச் செலவழிப்பதால் உன்மீது குற்றமில்லை" என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
وحدثنا عبد بن حميد، اخبرنا عبد الرزاق، اخبرنا معمر، عن الزهري، عن عروة، عن عايشة، قالت جاءت هند الى النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله والله ما كان على ظهر الارض اهل خباء احب الى من ان يذلهم الله من اهل خبايك وما على ظهر الارض اهل خباء احب الى من ان يعزهم الله من اهل خبايك . فقال النبي صلى الله عليه وسلم " وايضا والذي نفسي بيده " . ثم قالت يا رسول الله ان ابا سفيان رجل ممسك فهل على حرج ان انفق على عياله من ماله بغير اذنه فقال النبي صلى الله عليه وسلم " لا حرج عليك ان تنفقي عليهم بالمعروف
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Judicial Decisions
- Hadith Index
- #4479
- Book Index
- 10
Grades
- -
