ஹதீஸ்கள்
#4186
ஸஹீஹ் முஸ்லிம் - Gifts
நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தந்தை எனக்கு ஓர் அன்பளிப்புப் பொருளை வழங்கினார்கள். பிறகு அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சாட்சியாக்குவதற்காக என்னை அவர்களிடம் அழைத்துச் சென்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உம்முடைய பிள்ளைகள் அனைவருக்கும் இதை வழங்கினீரா?" என்று கேட்டார்கள். என் தந்தை "இல்லை" என்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவரிடமிருந்து நீர் நன்மையை எதிர்பார்ப்பதைப் போன்று அவர்கள் அனைவரிடமிருந்தும் எதிர்பார்க்க வில்லையா?"’ என்று கேட்டார்கள். என் தந்தை "ஆம்" (எதிர் பார்க்கிறேன்) என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவ்வாறாயின், நான் (இதற்குச்) சாட்சியாக இருக்க மாட்டேன்" என்று கூறினார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் அவ்ன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இதை நான் முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்களிடம் அறிவித்தபோது, "உங்கள் பிள்ளைகளை (இயன்றவரை)ச் சமமாக நடத்துங்கள்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றே நாம் அறிவித்துவருகிறோம் என்றார்கள். அத்தியாயம் :
حدثنا احمد بن عثمان النوفلي، حدثنا ازهر، حدثنا ابن عون، عن الشعبي، عن النعمان بن بشير، قال نحلني ابي نحلا ثم اتى بي الى رسول الله صلى الله عليه وسلم ليشهده فقال " اكل ولدك اعطيته هذا " . قال لا . قال " اليس تريد منهم البر مثل ما تريد من ذا " . قال بلى . قال " فاني لا اشهد " . قال ابن عون فحدثت به محمدا فقال انما تحدثنا انه قال " قاربوا بين اولادكم
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Gifts
- Hadith Index
- #4186
- Book Index
- 24
Grades
- -
