ஹதீஸ்கள்
#4084
ஸஹீஹ் முஸ்லிம் - Irrigation
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழங்கள் கொண்டுவரப்பட்டன. அப்போது அவர்கள், "இது என்ன?நம் பேரீச்சம் பழங்களுக்கு வேறுபடுகிறதே!" என்று கேட்டார்கள். அதற்கு (பேரீச்சம் பழங்களைக் கொண்டுவந்த) அந்த மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! நம் பேரீச்சம் பழங்களில் இரண்டு "ஸாஉ"கள் கொடுத்துவிட்டு, இ(ந்த உயர் ரகப் பேரீச்சம் பழத்)தில் ஒரு "ஸாஉ" வாங்கினோம்" என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதுதான் வட்டியாகும். இதைத் திருப்பிக் கொடுத்துவிடுங்கள்; பிறகு நமது பேரீச்சம் பழத்தை (தனியே) விற்றுவிட்டு, (அந்தத் தொகையின் மூலம்) நமக்காக இந்த (உயர் ரகப்) பேரீச்சம் பழத்தை வாங்குங்கள்" என்று கூறினார்கள். அத்தியாயம் :
وحدثنا سلمة بن شبيب، حدثنا الحسن بن اعين، حدثنا معقل، عن ابي قزعة، الباهلي عن ابي نضرة، عن ابي سعيد، قال اتي رسول الله صلى الله عليه وسلم بتمر فقال " ما هذا التمر من تمرنا " . فقال الرجل يا رسول الله بعنا تمرنا صاعين بصاع من هذا . فقال رسول الله صلى الله عليه وسلم " هذا الربا فردوه ثم بيعوا تمرنا واشتروا لنا من هذا
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Irrigation
- Hadith Index
- #4084
- Book Index
- 123
Grades
- -
