ஹதீஸ்கள்
#3951
ஸஹீஹ் முஸ்லிம் - Transactions
ஹன்ழலா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களிடம் நிலத்தைக் குத்தகைக்கு விடுவது பற்றிக் கேட்டேன். அவர்கள், "நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்" என்று பதிலளித்தார்கள். உடனே நான், "தங்கம் மற்றும் வெள்ளிக் (காசுகளுக்)குப் பதிலாக நிலத்தைக் குத்தகைக்கு விடலாமா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "தங்கம் மற்றும் வெள்ளிக் (காசுகளுக்)குப் பதிலாக நிலத்தைக் குத்தகைக்கு விடுவதில் குற்றமில்லை" என்றார்கள். அத்தியாயம் :
حدثنا يحيى بن يحيى، قال قرات على مالك عن ربيعة بن ابي عبد الرحمن، عن حنظلة بن قيس، انه سال رافع بن خديج عن كراء الارض، فقال نهى رسول الله صلى الله عليه وسلم عن كراء الارض قال فقلت ابالذهب والورق فقال اما بالذهب والورق فلا باس به
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Transactions
- Hadith Index
- #3951
- Book Index
- 150
Grades
- -
