ஹதீஸ்கள்
#3930
ஸஹீஹ் முஸ்லிம் - Transactions
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், பல்லாண்டு விளைச்சலை (முன்கூட்டியே) விற்பதற்கு ("முஆவமா" அல்லது "பைஉஸ் ஸினீன்") தடைவிதித்தார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "(மரத்தில் விளையும்) கனிகளைப் பல்லாண்டுகளுக்கு விற்பதைத் தடைசெய்தார்கள்" என இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Transactions
- Hadith Index
- #3930
- Book Index
- 129
Grades
- -