ஹதீஸ்கள்
#3912
ஸஹீஹ் முஸ்லிம் - Transactions
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "முஸாபனா", "முஹாகலா", "முகாபரா" ஆகியவற்றையும் கனிவதற்கு முன் (மரத்திலுள்ள) கனிகளை விற்பதையும் தடை செய்தார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சலீம் பின் ஹய்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் சயீத் பின் மீனா (ரஹ்) அவர்களிடம், "கனிதல் ("இஷ்காஹ்") என்றால் என்ன?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "உண்பதற்கு ஏற்றவாறு சிவப்பாக, மஞ்சளாக மாறுவது" என விடையளித்தார்கள். அத்தியாயம் :
وحدثنا عبد الله بن هاشم، حدثنا بهز، حدثنا سليم بن حيان، حدثنا سعيد بن، ميناء عن جابر بن عبد الله، قال نهى رسول الله صلى الله عليه وسلم عن المزابنة والمحاقلة والمخابرة وعن بيع الثمرة حتى تشقح . قال قلت لسعيد ما تشقح قال تحمار وتصفار ويوكل منها
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Transactions
- Hadith Index
- #3912
- Book Index
- 111
Grades
- -
