ஹதீஸ்கள்
#3532
ஸஹீஹ் முஸ்லிம் - Marriage
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "ஒரு பெண் ஒருவருக்கு வாழ்க்கைப் பட்டிருந்தாள். பின்னர் அவளை அவர் மணவிலக்குச் செய்துவிட்டார். எனவே, அவள் வேறொருவரை மணந்துகொண்டாள். அக்கணவன் அவளுடன் தாம்பத்திய உறவு கொள்வதற்கு முன் அவளை மணவிலக்குச் செய்துவிடுகிறான். இந்நிலையில் அவள் முந்தைய கணவருக்கு அனுமதிக்கப்பட்டவளாக ஆவாளா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் "இ(ரண்டாவது கண)வர் அவளிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்காத வரை அது முடியாது" என்று கூறினார்கள். - மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
وحدثناه محمد بن عبد الله بن نمير، حدثنا ابي ح، وحدثناه محمد بن المثنى، حدثنا يحيى، - يعني ابن سعيد - جميعا عن عبيد الله، بهذا الاسناد . مثله . وفي حديث يحيى عن عبيد الله حدثنا القاسم عن عايشة
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Marriage
- Hadith Index
- #3532
- Book Index
- 134
Grades
- -
