ஹதீஸ்கள்
#3494
ஸஹீஹ் முஸ்லிம் - Marriage
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் திருமணத்தின் மகிழ்ச்சி (ரேகை)யைக் கண்டார்கள். அப்போது நான், "ஓர் அன்சாரிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டேன்" என்றேன். அவர்கள், "அவளுக்கு எவ்வளவு மஹ்ர் கொடுத்தீர்கள்?" என்று கேட்டார்கள். நான் "ஒரு பேரீச்சங்கொட்டை (எடையளவு)" என்றேன். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "ஒரு பேரீச்சங்கொட்டை(யின் எடையளவு) தங்கத்தை" என இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
وحدثنا اسحاق بن ابراهيم، ومحمد بن قدامة، قالا اخبرنا النضر بن شميل، حدثنا شعبة، حدثنا عبد العزيز بن صهيب، قال سمعت انسا، يقول قال عبد الرحمن بن عوف راني رسول الله صلى الله عليه وسلم وعلى بشاشة العرس فقلت تزوجت امراة من الانصار . فقال " كم اصدقتها " . فقلت نواة . وفي حديث اسحاق من ذهب
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Marriage
- Hadith Index
- #3494
- Book Index
- 96
Grades
- -
