ஹதீஸ்கள்
#3483
ஸஹீஹ் முஸ்லிம் - Marriage
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை ஷவ்வால் மாதத்தில் மணந்து கொண்டார்கள்; ஷவ்வால் மாதத்திலேயே என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியரில் அவர்களுடன் என்னைவிட அதிக நெருக்கத்திற்குரியவர் யார்? இதன் அறிவிப்பாளரான உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஆயிஷா (ரலி) அவர்கள் தங்கள் (குடும்பப்) பெண்களை ஷவ்வால் மாதம் (மணமுடித்து) அனுப்பிவைப்பதையே விரும்புவார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் ஆயிஷா (ரலி) அவர்களின் செயல் குறித்த (இறுதிக்) குறிப்பு இடம்பெறவில்லை. அத்தியாயம் :
حدثنا ابو بكر بن ابي شيبة، وزهير بن حرب، - واللفظ لزهير - قالا حدثنا وكيع، حدثنا سفيان، عن اسماعيل بن امية، عن عبد الله بن عروة، عن عروة، عن عايشة، قالت تزوجني رسول الله صلى الله عليه وسلم في شوال وبنى بي في شوال فاى نساء رسول الله صلى الله عليه وسلم كان احظى عنده مني . قال وكانت عايشة تستحب ان تدخل نساءها في شوال
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Marriage
- Hadith Index
- #3483
- Book Index
- 85
Grades
- -
