ஹதீஸ்கள்
#3353
ஸஹீஹ் முஸ்லிம் - Pilgrimage
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எல்லா ஊர்களையும் தூக்கிச் சாப்பிடக்கூடிய, "யஸ்ரிப்" என மக்கள் கூறக்கூடிய ஓர் ஊருக்கு (நாடு துறந்து செல்லுமாறு) நான் கட்டளையிடப்பட்டேன். அதுதான் மதீனாவாகும். இரும்பின் துருவை (கொல்லனின்) உலை நீக்கிவிடுவதைப் போன்று மதீனா (தீய) மனிதர்களை வெளியேற்றிவிடும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். - மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் "உலை, துருவை நீக்கிவிடுவதைப் போன்று" என்று இடம்பெற்றுள்ளது."இரும்பு" எனும் குறிப்பு இடம்பெறவில்லை. அத்தியாயம் :
وحدثنا قتيبة بن سعيد، عن مالك بن انس، - فيما قري عليه - عن يحيى بن، سعيد قال سمعت ابا الحباب، سعيد بن يسار يقول سمعت ابا هريرة، يقول قال رسول الله صلى الله عليه وسلم " امرت بقرية تاكل القرى يقولون يثرب وهى المدينة تنفي الناس كما ينفي الكير خبث الحديد
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Pilgrimage
- Hadith Index
- #3353
- Book Index
- 557
Grades
- -
