ஹதீஸ்கள்
#3309
ஸஹீஹ் முஸ்லிம் - Pilgrimage
ஜாபிர் பின் அப்தில்லாஹ் அல் அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டாமல் தலையில் கறுப்புத் தலைப்பாகை அணிந்த நிலையில் மக்காவிற்குள் நுழைந்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் குதைபா பின் சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "மக்கா வெற்றி நாளில் நுழைந்தார்கள்" என்று இடம் பெற்றுள்ளது. - ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி நாளில் தலையில் கறுப்புத் தலைப்பாகை அணிந்து கொண்டு (மக்காவினுள்) நுழைந்தார்கள். அத்தியாயம் :
حدثنا يحيى بن يحيى التميمي، وقتيبة بن سعيد الثقفي، قال يحيى اخبرنا وقال، قتيبة حدثنا معاوية بن عمار الدهني، عن ابي الزبير، عن جابر بن عبد الله الانصاري، ان رسول الله صلى الله عليه وسلم دخل مكة - وقال قتيبة دخل يوم فتح مكة - وعليه عمامة سوداء بغير احرام . وفي رواية قتيبة قال حدثنا ابو الزبير عن جابر
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Pilgrimage
- Hadith Index
- #3309
- Book Index
- 513
Grades
- -
