ஹதீஸ்கள்
#3294
ஸஹீஹ் முஸ்லிம் - Pilgrimage
உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் மக்காவில் தங்கள் (பெரிய தந்தையின்) வீட்டில் தங்குவீர்களா?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(என் பெரிய தந்தையின் புதல்வர்) அகீல், குடியிருப்புகள் அல்லது வீடுகளில் எதையேனும் நமக்காக விட்டுவைத்துள்ளாரா, என்ன?" என்று கேட்டார்கள். (நபியவர்களின் பெரிய தந்தையான) அபூதாலிபின் சொத்துக்களுக்கு அகீலும் தாலிபும் வாரிசானார்கள். (அபூதாலிபின் மற்ற இரு புதல்வர்களான) ஜஅஃபர் (ரலி) அவர்களும் அலீ (ரலி) அவர்களும் முஸ்லிம்களாக இருந்ததால் (தம் தந்தையின் சொத்துக்களில்) எதற்கும் வாரிசாக (முடிய)வில்லை. (அப்போது) அகீலும் தாலிபும் இறைமறுப்பாளர்களாக இருந்தனர். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثني ابو الطاهر، وحرملة بن يحيى، قالا اخبرنا ابن وهب، اخبرنا يونس، بن يزيد عن ابن شهاب، ان علي بن حسين، اخبره ان عمرو بن عثمان بن عفان اخبره عن اسامة بن زيد بن حارثة، انه قال يا رسول الله اتنزل في دارك بمكة فقال " وهل ترك لنا عقيل من رباع او دور " . وكان عقيل ورث ابا طالب هو وطالب ولم يرثه جعفر ولا علي شييا لانهما كانا مسلمين وكان عقيل وطالب كافرين
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Pilgrimage
- Hadith Index
- #3294
- Book Index
- 498
Grades
- -
