ஹதீஸ்கள்
#3166
ஸஹீஹ் முஸ்லிம் - Pilgrimage
அப்துல் அஸீஸ் பின் ருஃபைஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் அறிந்த ஏதேனும் ஒரு செய்தியை என்னிடம் கூறுங்கள்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "தர்வியா”வுடைய (துல்ஹஜ் எட்டாவது) நாளில் எங்கு லுஹ்ர் தொழுதார்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "மினாவில்" என்று பதிலளித்தார்கள். நான், "(கிரியைகளை முடித்து) மினாவிலிருந்து புறப்படும் (துல்ஹஜ் 12 அல்லது 13ஆவது) நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கு அஸ்ர் தொழுதார்கள்?" என்று கேட்டேன். அதற்கு, "அல்அப்தஹ் எனுமிடத்தில்" என்று பதிலளித்துவிட்டு, பிறகு "உன்னுடைய தலைவர்கள் செய்வதைப் போன்று நீயும் செய்து கொள்" என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
حدثني زهير بن حرب، حدثنا اسحاق بن يوسف الازرق، اخبرنا سفيان، عن عبد العزيز بن رفيع، قال سالت انس بن مالك قلت اخبرني عن شىء، عقلته عن رسول الله صلى الله عليه وسلم اين صلى الظهر يوم التروية قال بمنى . قلت فاين صلى العصر يوم النفر قال بالابطح - ثم قال - افعل ما يفعل امراوك
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Pilgrimage
- Hadith Index
- #3166
- Book Index
- 370
Grades
- -
