ஹதீஸ்கள்
#2927
ஸஹீஹ் முஸ்லிம் - Pilgrimage
இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! மக்கள் எல்லாரும் (ஹஜ், உம்ரா ஆகிய) இரு கிரியைகளையும் நிறைவேற்றிவிட்டுத் திரும்புகின்றனர். நான் மட்டும் (ஹஜ் என்கிற) ஒரேயொரு கிரியையை நிறைவேற்றிவிட்டுத் திரும்புகிறேனே?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீ (சற்றுக்) காத்திருந்து, (மாதவிடாயிலிருந்து) தூய்மையடைந்ததும் "தன்ஈமு"க்குச் சென்று, அங்கு உம்ராவிற்காக "தல்பியா" கூறிக்கொள். பிறகு நாளை நாம் இன்னின்ன இடத்தில் சந்திப்போம். ஆனால், உம்ராவிற்கான நற்பலன் (நீ ஏற்றுக்கொண்ட) "உனது சிரமத்திற்கு" அல்லது "உனது பொருட்செலவிற்கு" தக்கவாறுதான் கிட்டும்!" என்றார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
وحدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا ابن علية، عن ابن عون، عن ابراهيم، عن الاسود، عن ام المومنين، ح وعن القاسم، عن ام المومنين، قالت قلت يا رسول الله يصدر الناس بنسكين واصدر بنسك واحد قال " انتظري فاذا طهرت فاخرجي الى التنعيم فاهلي منه ثم القينا عند كذا وكذا - قال اظنه قال غدا - ولكنها على قدر نصبك - او قال - نفقتك
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Pilgrimage
- Hadith Index
- #2927
- Book Index
- 136
Grades
- -
