ஹதீஸ்கள்
#2641
ஸஹீஹ் முஸ்லிம் - Fasting
உம்முல் ஃபள்ல் பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இன்று நோன்பு நோற்றிருக்கிறார்களா?" என்று "அரஃபா" நாளில் எனக்கருகே மக்கள் சிலர் விவாதித்தனர். சிலர் "அவர்கள் நோன்பு வைத்திருக்கிறார்கள்" என்றனர். மற்றும் சிலர் "அவர்கள் நோன்பு வைக்கவில்லை" என்றனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பால் கோப்பை ஒன்றை நான் கொடுத்தனுப்பினேன்; அப்போது அவர்கள் "அரஃபா" பெருவெளியில் ஒட்டகத்தின் மேல் இருந்தார்கள். அதை அவர்கள் அருந்தி (தாம் நோன்பாளியல்ல என்பதை உணர்த்தி)னார்கள். இதை அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களின் அடிமையாயிருந்த உமைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். - மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், "அவர்கள் ஒட்டகத்தின் மேல் இருந்தார்கள்" எனும் குறிப்பு இல்லை. "உம்முல் ஃபள்ல் (ரலி) அவர்களின் அடிமையாயிருந்த உமைர் (ரஹ்) அவர்கள் இதை அறிவிக்கிறார்கள்" என்று இடம்பெற்றுள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதிலும், "உம்முல் ஃபள்ல் (ரலி) அவர்களின் அடிமையாயிருந்த உமைர் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்" என்றே இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد، ومحمد بن رمح، جميعا عن الليث بن سعد، - قال ابن رمح اخبرنا الليث، - عن يزيد بن ابي حبيب، ان عراكا، اخبره ان عروة اخبره ان عايشة اخبرته ان قريشا كانت تصوم عاشوراء في الجاهلية ثم امر رسول الله صلى الله عليه وسلم بصيامه حتى فرض رمضان فقال رسول الله صلى الله عليه وسلم " من شاء فليصمه ومن شاء فليفطره
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Fasting
- Hadith Index
- #2641
- Book Index
- 147
Grades
- -
