ஹதீஸ்கள்
#2597
ஸஹீஹ் முஸ்லிம் - Fasting
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் ரமளானில் (நோன்பு வைத்துக்கொண்டு) தம் மனைவியுடன் (பகலில்) தாம்பத்திய உறவில் ஈடுபட்டு (வந்து), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அது குறித்துத் தீர்ப்புக்கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(விடுதலை செய்ய) ஓர் அடிமையை நீர் பெற்றுள்ளீரா?" என்று கேட்டார்கள். அவர் "இல்லை" என்றார். "(தொடர்ந்து) இருமாதங்கள் நோன்பு நோற்க உம்மால் முடியுமா?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் "இல்லை" என்றார். "அவ்வாறாயின், அறுபது ஏழைகளுக்கு உணவளிப்பீராக!" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا يحيى بن يحيى، ومحمد بن رمح، قالا اخبرنا الليث، ح وحدثنا قتيبة، حدثنا ليث، عن ابن شهاب، عن حميد بن عبد الرحمن بن عوف، عن ابي هريرة، - رضى الله عنه - ان رجلا، وقع بامراته في رمضان فاستفتى رسول الله صلى الله عليه وسلم عن ذلك فقال " هل تجد رقبة " . قال لا . قال " وهل تستطيع صيام شهرين " . قال لا . قال " فاطعم ستين مسكينا
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Fasting
- Hadith Index
- #2597
- Book Index
- 103
Grades
- -
