ஹதீஸ்கள்
#2535
ஸஹீஹ் முஸ்லிம் - Fasting
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: "கறுப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு உங்களுக்குத் தென்படும்வரை நீங்கள் உண்ணுங்கள்; பருகுங்கள்" எனும் இந்த (2:187 ஆவது) வசனம் அருளப்பெற்றபோது, நோன்பு நோற்க நாடியுள்ள ஒருவர் தம் இரு கால்களில் (ஒன்றில்) கறுப்புக்கயிற்றையும் (மற்றொன்றில்) வெள்ளைக்கயிற்றையும் கட்டிக்கொண்டு, அவ்விரண்டும் தமது பார்வைக்குத் தெளிவாகப் புலப்படும்வரை சாப்பிட்டுக்கொண்டிருப்பார். ஆகவே, அதற்குப் பின்னர் அல்லாஹ், "மினல் ஃபஜ்ர்" (விடியலின்) எனும் சொல்லையும் சேர்த்து அருளினான். அப்போதுதான் மக்கள், இதன் மூலம் அல்லாஹ் அதிகாலையையும் இரவையுமே நாடுகிறான் என்பதை அறிந்துகொண்டார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثني محمد بن سهل التميمي، وابو بكر بن اسحاق قالا حدثنا ابن ابي مريم، اخبرنا ابو غسان، حدثني ابو حازم، عن سهل بن سعد، - رضى الله عنه - قال لما نزلت هذه الاية { وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الابيض من الخيط الاسود} قال فكان الرجل اذا اراد الصوم ربط احدهم في رجليه الخيط الاسود والخيط الابيض فلا يزال ياكل ويشرب حتى يتبين له رييهما فانزل الله بعد ذلك { من الفجر} فعلموا انما يعني بذلك الليل والنهار
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Fasting
- Hadith Index
- #2535
- Book Index
- 41
Grades
- -
