ஹதீஸ்கள்
#2513
ஸஹீஹ் முஸ்லிம் - Fasting
சஅத் பின் உபைதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் "இன்றைய இரவு (மாதத்தின்) பாதி இரவாகும் (இன்றிரவுடன் அரை மாதமாகிறது)" என்று கூறியதை இப்னு உமர் (ரலி) அவர்கள் செவியுற்றார்கள். உடனே அந்த மனிதரிடம் "இன்றைய இரவுதான் (மாதத்தின்) பாதியாகும் என உமக்கு எப்படித் தெரியும்? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது கை விரல்களால் இரண்டு முறை பத்து பத்து எனச் சைகை செய்து) "மாதம் என்பது இவ்வளவு இவ்வளவு இரவுகளாகும்" என்று கூறிவிட்டு, (மூன்றாவது தடவையில்) "இவ்வளவு" (என்று கூறியவாறு எல்லா விரல்களாலும் சைகை செய்து பெருவிரலை மட்டும் மடக்கிக்காட்டி மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளாகவும் இருக்கும்) என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள். அத்தியாயம் :
حدثنا ابو كامل الجحدري، حدثنا عبد الواحد بن زياد، حدثنا الحسن بن عبيد، الله عن سعد بن عبيدة، قال سمع ابن عمر، - رضى الله عنهما - رجلا يقول الليلة ليلة النصف فقال له ما يدريك ان الليلة النصف سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " الشهر هكذا وهكذا " . واشار باصابعه العشر مرتين " وهكذا " . في الثالثة واشار باصابعه كلها وحبس او خنس ابهامه
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Fasting
- Hadith Index
- #2513
- Book Index
- 19
Grades
- -
