ஹதீஸ்கள்
#2490
ஸஹீஹ் முஸ்லிம் - Zakat
உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தர்ம ஆடு ஒன்றை எனக்கு அனுப்பிவைத்தார்கள். அதில் சிறிது இறைச்சியை நான் ஆயிஷா (ரலி) அவர்களுக்குக் கொடுத்தனுப்பினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றபோது, "உங்களிடம் (உண்பதற்கு) ஏதும் உள்ளதா?" எனக் கேட்டார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், "இல்லை. நீங்கள் நுஸைபா (உம்மு அத்திய்யா)வுக்கு (தர்மமாக) அனுப்பிய ஆட்டின் ஒரு பகுதியை அவர் நமக்கு அனுப்பிவைத்தார். அதைத் தவிர வேறொன்றுமில்லை" என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அது தனது இடத்தை (அன்பளிப்பின் தகுதியை) அடைந்துவிட்டது" என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثني زهير بن حرب، حدثنا اسماعيل بن ابراهيم، عن خالد، عن حفصة، عن ام عطية، قالت بعث الى رسول الله صلى الله عليه وسلم بشاة من الصدقة فبعثت الى عايشة منها بشىء فلما جاء رسول الله صلى الله عليه وسلم الى عايشة قال " هل عندكم شىء " . قالت لا . الا ان نسيبة بعثت الينا من الشاة التي بعثتم بها اليها قال " انها قد بلغت محلها
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Zakat
- Hadith Index
- #2490
- Book Index
- 227
Grades
- -
