ஹதீஸ்கள்
#2443
ஸஹீஹ் முஸ்லிம் - Zakat
ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹுனைன் போர்ச்செல்வங்களிலிருந்து) அபூசுஃப்யான் பின் ஹர்ப் (ரலி), ஸஃப்வான் பின் உமய்யா (ரலி), உயைனா பின் ஹிஸ்ன் (பின் பத்ர்-ரலி) மற்றும் அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி) ஆகியோருக்குத் தலா நூறு ஒட்டகங்கள் கொடுத்தார்கள். அப்பாஸ் பின் மிர்தாஸ் (ரலி) அவர்களுக்கு அதைவிடக் குறைவாகவே கொடுத்தார்கள். அப்போது அப்பாஸ் பின் மிர்தாஸ் ரலி) அவர்கள் பின்வருமாறு கவி பாடினார்கள்: எனது பங்கையும் (என் குதிரை) உபைதின் பங்கையும் உயைனாவுக்கும் அக்ரஉக்குமிடையே பங்கிடுகிறீரா? சபைகளில் மிர்தாஸை மிஞ்சுபவர்களாக பத்ருமில்லை; ஹாபிஸும் இல்லை. அவ்விருவரையும்விட நான் குறைந்தவனுமில்லை. யாரை இன்று நீர் தாழ்த்திவிட்டீரோ அவர் உயர்த்தப்படப்போவதில்லை. அப்போது அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களை முழுமையாக்கி (வழங்கி)னார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن ابي عمر المكي، حدثنا سفيان، عن عمر بن سعيد بن مسروق، عن ابيه، عن عباية بن رفاعة، عن رافع بن خديج، قال اعطى رسول الله صلى الله عليه وسلم ابا سفيان بن حرب وصفوان بن امية وعيينة بن حصن والاقرع بن حابس كل انسان منهم ماية من الابل واعطى عباس بن مرداس دون ذلك . فقال عباس بن مرداس اتجعل نهبي ونهب العبيد بين عيينة والاقرع فما كان بدر ولا حابس يفوقان مرداس في المجمع وما كنت دون امري منهما ومن تخفض اليوم لا يرفع قال فاتم له رسول الله صلى الله عليه وسلم ماية
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Zakat
- Hadith Index
- #2443
- Book Index
- 180
Grades
- -
