ஹதீஸ்கள்
#2443
ஸஹீஹ் முஸ்லிம் - Zakat
ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹுனைன் போர்ச்செல்வங்களிலிருந்து) அபூசுஃப்யான் பின் ஹர்ப் (ரலி), ஸஃப்வான் பின் உமய்யா (ரலி), உயைனா பின் ஹிஸ்ன் (பின் பத்ர்-ரலி) மற்றும் அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி) ஆகியோருக்குத் தலா நூறு ஒட்டகங்கள் கொடுத்தார்கள். அப்பாஸ் பின் மிர்தாஸ் (ரலி) அவர்களுக்கு அதைவிடக் குறைவாகவே கொடுத்தார்கள். அப்போது அப்பாஸ் பின் மிர்தாஸ் ரலி) அவர்கள் பின்வருமாறு கவி பாடினார்கள்: எனது பங்கையும் (என் குதிரை) உபைதின் பங்கையும் உயைனாவுக்கும் அக்ரஉக்குமிடையே பங்கிடுகிறீரா? சபைகளில் மிர்தாஸை மிஞ்சுபவர்களாக பத்ருமில்லை; ஹாபிஸும் இல்லை. அவ்விருவரையும்விட நான் குறைந்தவனுமில்லை. யாரை இன்று நீர் தாழ்த்திவிட்டீரோ அவர் உயர்த்தப்படப்போவதில்லை. அப்போது அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களை முழுமையாக்கி (வழங்கி)னார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Zakat
- Hadith Index
- #2443
- Book Index
- 180
Grades
- -