ஹதீஸ்கள்
#2369
ஸஹீஹ் முஸ்லிம் - Zakat
ஆபில் லஹ்ம்" என்பாரின் அடிமையாயிருந்த உமைர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) என் உரிமையாளர் என்னிடம் இறைச்சியை (நீளமாக வெட்டி உப்புக் கண்டத்திற்காக)க் காயப்போடுமாறு கட்டளையிட்டார். அப்போது என்னிடம் ஓர் ஏழை வந்தார். அதிலிருந்து சிறிதளவு இறைச்சியை அவருக்கு நான் வழங்கிவிட்டேன். இதை என் உரிமையாளர் அறிந்தபோது என்னை அடித்துவிட்டார். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைத் தெரிவித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் உரிமையாளரை அழைத்து, "அவரை ஏன் அடித்தீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு "நான் சொல்லாமலேயே எனது உணவை மற்றவர்களுக்கு இவர் கொடுக்கிறார்" என்று என் உரிமையாளர் கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(ஏழைக்கு வழங்கியதால்) உங்கள் இருவருக்குமே நறபலன் உண்டு"என்று கூறினார்கள். அத்தியாயம் :
وحدثنا قتيبة بن سعيد، حدثنا حاتم، - يعني ابن اسماعيل - عن يزيد، - يعني ابن ابي عبيد - قال سمعت عميرا، مولى ابي اللحم قال امرني مولاى ان اقدد، لحما فجاءني مسكين فاطعمته منه فعلم بذلك مولاى فضربني فاتيت رسول الله صلى الله عليه وسلم فذكرت ذلك له فدعاه . فقال " لم ضربته " . فقال يعطي طعامي بغير ان امره . فقال " الاجر بينكما
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Zakat
- Hadith Index
- #2369
- Book Index
- 106
Grades
- -
