ஹதீஸ்கள்
#2147
ஸஹீஹ் முஸ்லிம் - Prayer - Funerals
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்கள் (கத்தியால் குத்தப்பட்டு) காயமுற்றிருந்தபோது, ஸுஹைப் (ரலி) அவர்கள் தமது இல்லத்திலிருந்து உமர் (ரலி) அவர்களை நோக்கி வந்து, அவர்களுக்கு எதிரில் நின்று அழுதுகொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் "ஏன் அழுகிறீர்? எனக்காகவா அழுகிறீர்?" என்று கேட்டார்கள். ஸுஹைப் (ரலி) அவர்கள் "ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களுக்காகவே அழுகிறேன், இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே!" என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் மீதாணையாக! "எவருக்காக அழப்படுகின்றதோ அவர் வேதனை செய்யப்படுவார்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நீர் அறிந்தே உள்ளீர்" என்று கூறினார்கள். இதன் அறிவிப்பாளரான அப்துல் மலிக் பின் உமைர் பின் சுவைத் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: இந்த ஹதீஸை நான் தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களிடம் கூறினேன். அப்போது அவர்கள் "இதுவெல்லாம் அந்த யூதர்களுக்காகத்தான் என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிவந்தார்கள்" என்றார்கள். அத்தியாயம் :
وحدثني علي بن حجر، اخبرنا شعيب بن صفوان ابو يحيى، عن عبد الملك بن، عمير عن ابي بردة بن ابي موسى، عن ابي موسى، قال لما اصيب عمر اقبل صهيب من منزله حتى دخل على عمر فقام بحياله يبكي فقال عمر علام تبكي اعلى تبكي قال اي والله لعليك ابكي يا امير المومنين . قال والله لقد علمت ان رسول الله صلى الله عليه وسلم قال " من يبكى عليه يعذب " . قال فذكرت ذلك لموسى بن طلحة فقال كانت عايشة تقول انما كان اوليك اليهود
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Prayer - Funerals
- Hadith Index
- #2147
- Book Index
- 25
Grades
- -
