ஹதீஸ்கள்
#2064
ஸஹீஹ் முஸ்லிம் - Prayer - Two Eids
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் மீதாணையாக! (ஒரு பெருநாள் தினத்தன்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது பள்ளிவாசலி(ன் வளாகத்தி)ல் அபிசீனியர்கள் ஈட்டியெறிந்து (வீர விளையாட்டு) விளையாடிக்கொண்டிருந்தனர். அவர்களது விளையாட்டை நான் பார்ப்பதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது அறைவாசலில் நின்றபடி தமது மேல்துண்டால் என்னை மறைத்துக்கொண்டிருந்தார்கள். நானாக (விளையாட்டை ரசித்துச் சலிப்புற்று)த் திரும்பும்வரை எனக்காகவே அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். கேளிக்கைகள்மீது பேராவல் கொண்ட இளம்வயதுப் பெண் எவ்வளவு நேரம் வேடிக்கை பார்ப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுக்கொள்ளுங்கள். அத்தியாயம் :
وحدثني ابو الطاهر، اخبرني ابن وهب، اخبرني يونس، عن ابن شهاب، عن عروة، بن الزبير قال قالت عايشة والله لقد رايت رسول الله صلى الله عليه وسلم يقوم على باب حجرتي - والحبشة يلعبون بحرابهم في مسجد رسول الله صلى الله عليه وسلم - يسترني بردايه لكى انظر الى لعبهم ثم يقوم من اجلي حتى اكون انا التي انصرف . فاقدروا قدر الجارية الحديثة السن حريصة على اللهو
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Prayer - Two Eids
- Hadith Index
- #2064
- Book Index
- 19
Grades
- -
