ஹதீஸ்கள்
#2046
ஸஹீஹ் முஸ்லிம் - Introduction
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் உறுதி கூறுகிறேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பெருநாள் அன்று) உரை நிகழ்த்துவதற்கு முன் தொழுதார்கள். (தொழுகைக்குப்) பிறகு உரையாற்றினார்கள். அப்போது பெண்கள் செவியேற்கும் விதத்தில் தாம் பேசவில்லை என்று எண்ணியவர்களாகப் பெண்கள் பகுதிக்குச் சென்று, அவர்களுக்கு (இஸ்லாமிய சட்டவிதிகளையும் மறுமை நாளையும்) நினைவூட்டி அறிவுரை கூறினார்கள்; தர்மம் செய்யும்படி அவர்களிடம் வலியுறுத்தினார்கள். (அவற்றைப் பெறுவதற்காக) பிலால் (ரலி) அவர்கள் தமது ஆடையை விரித்துப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். பெண்கள் தங்களுடைய மோதிரங்களையும் காதணிகளையும் பிறவற்றையும் (கழற்றிப்) போடலானார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
وحدثنا ابو بكر بن ابي شيبة، وابن ابي عمر، قال ابو بكر حدثنا سفيان بن، عيينة حدثنا ايوب، قال سمعت عطاء، قال سمعت ابن عباس، يقول اشهد على رسول الله صلى الله عليه وسلم لصلى قبل الخطبة - قال - ثم خطب فراى انه لم يسمع النساء فاتاهن فذكرهن ووعظهن وامرهن بالصدقة وبلال قايل بثوبه فجعلت المراة تلقي الخاتم والخرص والشىء . وحدثنيه ابو الربيع الزهراني، حدثنا حماد، ح وحدثني يعقوب الدورقي، حدثنا اسماعيل بن ابراهيم، كلاهما عن ايوب، بهذا الاسناد نحوه
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Introduction
- Hadith Index
- #2046
- Book Index
- 0
Grades
- -
