ஹதீஸ்கள்
#1991
ஸஹீஹ் முஸ்லிம் - Prayer - Friday
முஹம்மத் பின் அலீ பின் அல்ஹுசைன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நேரத்தில் ஜுமுஆ தொழுவார்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஜுமுஆ) தொழுவித்த பிறகு நாங்கள் எங்களுடைய ஒட்டகங்களிடம் சென்று அவற்றுக்கு ஓய்வளிப்போம்" என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "சூரியன் உச்சியிலிருந்து சாயும் (நண்பகல்) நேரத்தில் (ஜுமுஆ தொழுவார்கள்)" என்றும், ஒட்டகங்கள் என்பது "நீர் இறைக்கும் ஒட்டகங்களைக் குறிக்கும்" என்றும் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது. அத்தியாயம் :
وحدثنا عبد الله بن مسلمة بن قعنب، ويحيى بن يحيى، وعلي بن حجر، قال يحيى اخبرنا وقال الاخران، حدثنا عبد العزيز بن ابي حازم، عن ابيه، عن سهل، قال ما كنا نقيل ولا نتغدى الا بعد الجمعة - زاد ابن حجر - في عهد رسول الله صلى الله عليه وسلم
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Prayer - Friday
- Hadith Index
- #1991
- Book Index
- 41
Grades
- -
