ஹதீஸ்கள்
#1970
ஸஹீஹ் முஸ்லிம் - Prayer - Friday
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அபுல்காசிம் (நபி-ஸல்) அவர்கள், "வெள்ளியன்று ஒரு நேரம் உண்டு. சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் தொழுகையில் நின்று ஏதேனும் நன்மையைக் கேட்டால், அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமல் இருப்பதில்லை" என்று கூறினார்கள். அந்த நேரம் மிகவும் குறைவான நேரம் என்பதைத் தமது கையால் சைகை செய்து காட்டினார்கள். - மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا زهير بن حرب، حدثنا اسماعيل بن ابراهيم، حدثنا ايوب، عن محمد، عن ابي هريرة، قال قال ابو القاسم صلى الله عليه وسلم " ان في الجمعة لساعة لا يوافقها مسلم قايم يصلي يسال الله خيرا الا اعطاه اياه." وقال بيده يقللها يزهدها
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Prayer - Friday
- Hadith Index
- #1970
- Book Index
- 20
Grades
- -
