ஹதீஸ்கள்
#1918
ஸஹீஹ் முஸ்லிம் - Prayer - Travellers
அல்கமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அபுத்தர்தா (ரலி) அவர்களைச் சந்தித்தேன். அவர்கள் என்னிடம் "நீங்கள் எந்த நாட்டவர்?" என்று கேட்க, "இராக்கியர்" என்று நான் பதிலளித்தேன். "இராக்கியரில் நீங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்?" என்று அன்னார் வினவ, "கூஃபாவாசி" என நான் விடையளித்தேன். "அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஓதிய முறையில் நீங்கள் ஓதுவீர்களா?" என அவர்கள் கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். "அப்படியானால், "வல்லைலி இதா யஃக்ஷா" எனும் (92ஆவது) அத்தியாயத்தை ஓதிக் காட்டுங்கள்" என்றார்கள். நான் "வல்லைலி இதா யஃக்ஷா" என ஓதத் தொடங்கி "வத்தகரி வல்உன்ஸா" என ஓதினேன். உடனே அபுத்தர்தா (ரலி) அவர்கள் சிரித்துவிட்டு "இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓத நான் செவியேற்றேன்" என்று கூறினார்கள். - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், அல்கமா (ரஹ்) அவர்கள் "நான் ஷாம் (சிரியா) நாட்டிற்குச் சென்றேன். அங்கு அபுத்தர்தா (ரலி) அவர்களைச் சந்தித்தேன்" என்று கூறியதாக ஹதீஸ் தொடங்குகிறது. அத்தியாயம் :
حدثنا علي بن حجر السعدي، حدثنا اسماعيل بن ابراهيم، عن داود بن ابي، هند عن الشعبي، عن علقمة، قال لقيت ابا الدرداء فقال لي ممن انت قلت من اهل العراق . قال من ايهم قلت من اهل الكوفة . قال هل تقرا على قراءة عبد الله بن مسعود قال قلت نعم . قال فاقرا { والليل اذا يغشى} قال فقرات { والليل اذا يغشى * والنهار اذا تجلى * والذكر والانثى} . قال فضحك ثم قال هكذا سمعت رسول الله صلى الله عليه وسلم يقروها
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Prayer - Travellers
- Hadith Index
- #1918
- Book Index
- 346
Grades
- -
