ஹதீஸ்கள்
#1885
ஸஹீஹ் முஸ்லிம் - Prayer - Travellers
உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), "அபுல்முன்திர், இறைவேதத்தில் உமக்குத் தெரிந்த வசனங்களிலேயே எந்த வசனம் மிகவும் மகத்தானது என்று தெரியுமா?" எனக் கேட்டார்கள். நான் "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்" என்று கூறினேன். அவர்கள் "அபுல்முன்திர், இறைவேதத்தில் உமக்குத் தெரிந்த வசனங்களிலேயே எந்த வசனம் மிகவும் மகத்தானது என்று தெரியுமா?" என (மீண்டும்) கேட்டார்கள். நான் "அல்லாஹு லாயிலாஹ இல்லாஹுவல் ஹய்யுல் கய்யூம்... எனத் தொடங்கும் (2:255 ஆவது) வசனம்" என்று விடையளித்தேன். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மகிழ்ச்சியோடு) எனது நெஞ்சில் (ஓர் அடி) அடித்துவிட்டு "அல்லாஹ்வின் மீதாணையாக! உமது கல்வியாற்றல் உம்மை நெகிழச் செய்யட்டும் (வாழ்த்துகள்), அபுல்முன்திரே!" என்றார்கள். அத்தியாயம் :
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا عبد الاعلى بن عبد الاعلى، عن الجريري، عن ابي السليل، عن عبد الله بن رباح الانصاري، عن ابى بن كعب، قال قال رسول الله صلى الله عليه وسلم " يا ابا المنذر اتدري اى اية من كتاب الله معك اعظم " . قال قلت الله ورسوله اعلم . قال " يا ابا المنذر اتدري اى اية من كتاب الله معك اعظم " . قال قلت الله لا اله الا هو الحى القيوم . قال فضرب في صدري وقال " والله ليهنك العلم ابا المنذر
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Prayer - Travellers
- Hadith Index
- #1885
- Book Index
- 313
Grades
- -
