ஹதீஸ்கள்
#1834
ஸஹீஹ் முஸ்லிம் - Prayer - Travellers
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் ஒரு பெண்மணி இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வீட்டுக்கு) வந்து, "இவர் யார்?" என்று கேட்டார்கள். நான் "இவர் (இன்னார்;) இவர் (இரவெல்லாம்) உறங்காமல் தொழுதுகொண்டே இருப்பார்" என்று கூறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நற்செயல்களில் உங்களால் இயன்றதையே செய்துவாருங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் சடைவடையாதவரை அல்லாஹ்வும் சடைவடையமாட்டான்" என்று கூறினார்கள். ஒருவர் நிலையாகத் தொடர்ந்து செய்து வரும் நற்செயலே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு விருப்பமானதாக இருந்தது. இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், அபூஉசாமா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அந்தப் பெண்மணி பனூஅசத் குலத்தைச் சேர்ந்தவர் ஆவார்" என்று இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
حدثنا ابو بكر بن ابي شيبة، وابو كريب قال حدثنا ابو اسامة، عن هشام بن، عروة ح وحدثني زهير بن حرب، - واللفظ له - حدثنا يحيى بن سعيد، عن هشام، قال اخبرني ابي، عن عايشة، قالت دخل على رسول الله صلى الله عليه وسلم وعندي امراة فقال " من هذه " . فقلت امراة لا تنام تصلي . قال " عليكم من العمل ما تطيقون فوالله لا يمل الله حتى تملوا " . وكان احب الدين اليه ما داوم عليه صاحبه وفي حديث ابي اسامة انها امراة من بني اسد
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Prayer - Travellers
- Hadith Index
- #1834
- Book Index
- 262
Grades
- -
