ஹதீஸ்கள்
#1467
ஸஹீஹ் முஸ்லிம் - Mosques and Places of Prayer
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது : என் உற்ற தோழர் (நபி-ஸல்) அவர்கள் என்னிடம் "(உங்கள் தலைவருடைய சொல்லை) செவியேற்று அதற்குக் கட்டுப்பட வேண்டும்; அவர் (கை, கால்) உறுப்புகள் துண்டிக்கப்பட்ட அடிமையாக இருந்தாலும் சரியே" என்றும்,தொழுகையை உரிய நேரத்தில் தொழ வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள். "பின்னர் மக்கள் தொழுது முடித்துவிட்ட நிலையில் அவர்களை நீங்கள் அடைந்தால், (முன்பே) உங்களது தொழுகையை நீங்கள் காப்பாற்றிக் கொண்டவராவீர்கள்;அவ்வாறின்றி (அவர்களுடன் சேர்ந்து நீங்கள் மறுபடியும் தொழுதால்) அது உங்களுக்குக் கூடுதலான (நஃபில்) தொழுகையாக அமையும்" என்றும் கூறினார்கள். அத்தியாயம் :
وحدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا عبد الله بن ادريس، عن شعبة، عن ابي عمران، عن عبد الله بن الصامت، عن ابي ذر، قال ان خليلي اوصاني ان اسمع واطيع وان كان عبدا مجدع الاطراف وان اصلي الصلاة لوقتها " فان ادركت القوم وقد صلوا كنت قد احرزت صلاتك والا كانت لك نافلة
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Mosques and Places of Prayer
- Hadith Index
- #1467
- Book Index
- 300
Grades
- -
