ஹதீஸ்கள்
#839
ஸஹீஹ் முஸ்லிம் - Prayers
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: தொழுகை நேரத்தை மக்களுக்கு அறிவிப்பதற்காக, அவர்கள் புரிந்துகொள்ளக்கூடிய (அறிவிப்பு) முறையை உருவாக்குவது குறித்து (நபித்தோழர்கள்) பேசினார்கள். அப்போது சிலர், நெருப்பு மூட்டுவோம்; அல்லது மணி அடிப்போம் என்றனர். (இவை யூத, கிறிஸ்தவக் கலாசாரம் என்று மறுப்புத் தெரிவிக்கப்பட்டது.) இதையடுத்து தொழுகை அறிவிப்பு வாசகங்கள் இரட்டையாகவும் இகாமத்தின் வாசகங்கள் ஒற்றைப்படையாகவும் கூறும்படி பிலால் (ரலி) அவர்கள் கட்டளையிடப்பட்டார்கள். அத்தியாயம் :
وحدثنا اسحاق بن ابراهيم الحنظلي، اخبرنا عبد الوهاب الثقفي، حدثنا خالد الحذاء، عن ابي قلابة، عن انس بن مالك، قال ذكروا ان يعلموا، وقت الصلاة بشىء يعرفونه فذكروا ان ينوروا نارا او يضربوا ناقوسا فامر بلال ان يشفع الاذان ويوتر الاقامة
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Prayers
- Hadith Index
- #839
- Book Index
- 3
Grades
- -
