ஹதீஸ்கள்
#771
ஸஹீஹ் முஸ்லிம் - Menstruation
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபியவர்களுக்கு நபித்துவம் வழங்கப்படுவதற்கு முன்பு) கஅபா புதுப்பித்துக் கட்டப்பட்ட போது நபி (ஸல்) அவர்களும் அப்பாஸ் (ரலி) அவர்களும் கற்களைச் சுமந்து எடுத்து வந்தார்கள். அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள், (சிறுவராயிருந்த) நபி (ஸல்) அவர்களை நோக்கி கல் சுமப்பதற்கு (வசதியாக) உமது வேட்டியை அவிழ்த்துத் தோளில் (சும்மாடாக) வைத்துக் கொள்க! என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்களும் அவ்வாறே செய்தார்கள். உடனே மயக்கமுற்றுக் கீழே விழுந்தார்கள். அவர்களுடைய கண்கள் வானத்தை நோக்கி நிலைகுத்தி நின்றன. பிறகு எழுந்து என் வேட்டி, என் வேட்டி என்றார்கள். வேட்டியை (எடுத்துக் கொடுத்த உடனே அதை) இறுக்கமாகக் கட்டிக் கொண்டார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முஹம்மது பின் ராஃபிஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், உமது தோளில் என்பதற்கு பதிலாக உமது பிடரியில் என இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
وحدثنا اسحاق بن ابراهيم الحنظلي، ومحمد بن حاتم بن ميمون، جميعا عن محمد بن بكر، قال اخبرنا ابن جريج، ح وحدثني اسحاق بن منصور، ومحمد بن رافع، واللفظ، لهما - قال اسحاق اخبرنا وقال ابن رافع، حدثنا عبد الرزاق، - اخبرنا ابن جريج، اخبرني عمرو بن دينار، انه سمع جابر بن عبد الله، يقول لما بنيت الكعبة ذهب النبي صلى الله عليه وسلم وعباس ينقلان حجارة فقال العباس للنبي صلى الله عليه وسلم اجعل ازارك على عاتقك من الحجارة . ففعل فخر الى الارض وطمحت عيناه الى السماء ثم قام فقال " ازاري ازاري " . فشد عليه ازاره . قال ابن رافع في روايته على رقبتك . ولم يقل على عاتقك
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Menstruation
- Hadith Index
- #771
- Book Index
- 93
Grades
- -
