ஹதீஸ்கள்
#697
ஸஹீஹ் முஸ்லிம் - Menstruation
அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் பாலுணர்வு கிளர்ச்சி நீர் (மதீ) அதிகமாக வெளிப்படும் ஆடவனாக இருந்தேன். இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்க வெட்கப்பட்டுக் கொண்டிருந்தேன். நபியவர்களின் புதல்வியார் (ஃபாத்திமா) என் துணைவியாராக இருந்ததே இதற்குக் காரணம். எனவே, நான் மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்களிடம் (இது குறித்து நபியவர்களிடம் கேட்குமாறு) கூறினேன். அவர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், பிறவி உறுப்பைக் கழுவிக்கொண்டு அங்கத் தூய்மை (உளூ) செய்துகொள்ள வேண்டும் (குளிக்க வேண்டியதில்லை) என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
وحدثني هارون بن سعيد الايلي، واحمد بن عيسى، قالا حدثنا ابن وهب، اخبرني مخرمة بن بكير، عن ابيه، عن سليمان بن يسار، عن ابن عباس، قال قال علي بن ابي طالب ارسلنا المقداد بن الاسود الى رسول الله صلى الله عليه وسلم فساله عن المذى يخرج من الانسان كيف يفعل به فقال رسول الله صلى الله عليه وسلم " توضا وانضح فرجك
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Menstruation
- Hadith Index
- #697
- Book Index
- 19
Grades
- -
