ஹதீஸ்கள்
#668
ஸஹீஹ் முஸ்லிம் - Purification
அல்கமா (ரஹ்) மற்றும் அஸ்வத் (ரஹ்) ஆகியோர் கூறியதாவது: ஒரு மனிதர் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் (விருந்தினராகத்) தங்கினார். அவர் காலையில் தமது ஆடையைக் கழுவினார். (இதைக் கண்ட) ஆயிஷா (ரலி) அவர்கள், அது உமது ஆடையில் தென்பட்டால் அந்த இடத்தைக் கழுவினால் போதும். அவ்வாறு அது தென்படாவிட்டால் அந்த இடத்தைச் சுற்றிலும் தண்ணீர் தெளித்துவிடுவீராக! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையில்பட்ட இந்திரியத்தை நன்கு சுரண்டிவிடுவேன். அந்த ஆடையை அணிந்துகொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவார்கள் என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
وحدثنا يحيى بن يحيى، اخبرنا خالد بن عبد الله، عن خالد، عن ابي معشر، عن ابراهيم، عن علقمة، والاسود، ان رجلا، نزل بعايشة فاصبح يغسل ثوبه فقالت عايشة انما كان يجزيك ان رايته ان تغسل مكانه فان لم تر نضحت حوله ولقد رايتني افركه من ثوب رسول الله صلى الله عليه وسلم فركا فيصلي فيه
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Purification
- Hadith Index
- #668
- Book Index
- 134
Grades
- -
