ஹதீஸ்கள்
#525
ஸஹீஹ் முஸ்லிம் - Faith
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் விசாரணையின்றி சொர்க்கத்தில் நுழைவார்கள்" என்று கூறினார்கள். மக்கள், "அவர்கள் யார், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர்கள் எத்தகையவர்கள் எனில், ஓதிப்பார்க்கமாட்டார்கள்; பறவை சகுனம் பார்க்கமாட்டார்கள்; (நோய்க்காக) சூடிட்டுக் கொள்ளமாட்டார்கள்; தங்கள் இறைவன் மீதே முழு நம்பிக்கை வைப்பார்கள்" என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثني زهير بن حرب، حدثنا عبد الصمد بن عبد الوارث، حدثنا حاجب بن عمر ابو خشينة الثقفي، حدثنا الحكم بن الاعرج، عن عمران بن حصين، ان رسول الله صلى الله عليه وسلم قال " يدخل الجنة من امتي سبعون الفا بغير حساب " . قالوا من هم يا رسول الله قال " هم الذين لا يسترقون ولا يتطيرون ولا يكتوون وعلى ربهم يتوكلون
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Faith
- Hadith Index
- #525
- Book Index
- 431
Grades
- -
