ஹதீஸ்கள்
#407
ஸஹீஹ் முஸ்லிம் - Faith
மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள் என இடம் பெற்றுள்ளது: பின்னர் சிறிது காலம் எனக்கு வேதஅறிவிப்பு (வஹீ) நின்றுபோயிற்று. அப்போது (ஒரு நாள்) நான் நடந்துபோய்க்கொண்டிருந்தேன். ...அவரைப் பார்த்து பயந்து அதிர்ச்சிக்குள்ளான நான் தரையில் விழுந்துவிட்டேன்... பின்னர் வேதஅறிவிப்புத் தொடர்ந்து அதிகமாக வரலாயிற்று. - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது. அதில், "தொழுகை கடமையாக்கப்படுவதற்கு முன்னர் அந்த வசனங்களை (74:1-5) அல்லாஹ் அருளினான்" என்று சிறு வித்தியாசத்துடன் இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
وحدثني عبد الملك بن شعيب بن الليث، قال حدثني ابي، عن جدي، قال حدثني عقيل بن خالد، عن ابن شهاب، قال سمعت ابا سلمة بن عبد الرحمن، يقول اخبرني جابر بن عبد الله، انه سمع رسول الله صلى الله عليه وسلم يقول " ثم فتر الوحى عني فترة فبينا انا امشي " ثم ذكر مثل حديث يونس غير انه قال " فجثثت منه فرقا حتى هويت الى الارض " . قال وقال ابو سلمة والرجز الاوثان قال ثم حمي الوحى بعد وتتابع
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Faith
- Hadith Index
- #407
- Book Index
- 312
Grades
- -
