ஹதீஸ்கள்
#377
ஸஹீஹ் முஸ்லிம் - Faith
ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள், "எத்தனை பேர் இஸ்லாத்தை ஏற்றுள்ளார்கள்? என்பதை எனக்குக் கணக்கிட்டுச் சொல்லுங்கள்!" என்று கூறினார்கள். நாங்கள் அறுநூறு முதல் எழுநூறு பேர்வரை இருக்க, எங்களைப் பற்றி அஞ்சுகிறீர்களா, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களுக்குத் தெரியாது. நீங்கள் (எதிரிகளால்) சோதிக்கப்படலாம்!" என்று சொன்னார்கள். அவ்வாறே நாங்கள் சோதிக்கப் பட்டோம். எந்த அளவுக்கென்றால், (ஒரு கட்டத்தில்) எங்களில் சிலர் இரகசியமாகவே தவிரத் தொழ முடியாத நிலை ஏற்பட்டது. இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ابو بكر بن ابي شيبة، ومحمد بن عبد الله بن نمير، وابو كريب - واللفظ لابي كريب - قالوا حدثنا ابو معاوية، عن الاعمش، عن شقيق، عن حذيفة، قال كنا مع رسول الله صلى الله عليه وسلم فقال " احصوا لي كم يلفظ الاسلام " . قال فقلنا يا رسول الله صلى الله عليه وسلم اتخاف علينا ونحن ما بين الستماية الى السبعماية قال " انكم لا تدرون لعلكم ان تبتلوا " . قال فابتلينا حتى جعل الرجل منا لا يصلي الا سرا
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Faith
- Hadith Index
- #377
- Book Index
- 284
Grades
- -
