ஹதீஸ்கள்
#7552
ஸஹீஹ் அல்-புகாரீ - Oneness, Uniqueness of Allah (Tawheed)
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாவில் (நல்லடக்கத்தில்) கலந்துகொண்டார்கள். அப்போது குச்சியொன்றை எடுத்து தரையில் குத்தலானார்கள். மேலும், “சொர்க்கத்திலோ நரகத்திலோ தமது இருப்பிடம் எழுதப்பட்டிராத எவருமே உங்களிடையே இல்லை” என்று சொன் னார்கள். உடனே மக்கள் “நாங்கள் (இதன் மீதே) நம்பிக்கை கொண்டு, (நற்செயல்கள் புரியாமல்) இருந்துவிடமாட்டோமா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், பொல்லார்) எல்லாருக்கும் (அவரவர் செல்லும் வழி) எளிதாக்கப்பட்டுள்ளது” என்று சொல்லிவிட்டு, “எவர் (இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து நல்லறங்களை மெய்ப்பிக்கிறாரோ அவர் (சொர்க்கத்தின்) நல்வழியில் செல்வதை நாம் எளிதாக்குவோம்” எனும் (92:5-10ஆகிய) இறைவசனங்களைக் கூறினார்கள்.192 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Oneness, Uniqueness of Allah (Tawheed)
- Hadith Index
- #7552
- Book Index
- 177
Grades
- -